கீழடியில் தோண்ட தோண்ட வியப்பு: ஜனவரியில் மேலும் ஆய்வு

கீழடி: சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே உள்ள கீழடியில் தோண்ட தோண்ட தொன்மை கால நாகரிக நிலவரங்கள் தெரியவருவதை அடுத்து அங்கு ஜனவரியில் 6ஆம் கட்ட ஆய்வு தொடரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கீழடியில் கடந்த 2015ம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வந்தது.

மத்திய அரசு சார்பில் 2 மற்றும் 3ஆம் கட்டமாக அகழாய்வுப் பணிகள் நடந்தன. அதைத் தொடர்ந்து தமிழக தொல்லியல் துறை 4ஆம் கட்ட அகழாய்வை நடத்தியது.

பிறகு கடந்த ஜூன் 13ஆம் தேதி முதல் 5ஆம் கட்ட அகழாய்வுப் பணிகள் அங்கு நடக்கின்றன.

இந்நிலையில் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் ஆய்வுப் பணிகளை அதிகாரிகளுடன் பார்வையிட்டார்.

பிறகு பேசிய அவர், 11 விதமான தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடந்துவருவதாகவும் கீழடியில் ரூபாய் 15 கோடி செலவில் திறந்தவெளி அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்றும் அறிவித்தார். கீழடியில் இதுவரை 13,638 தொல்லியல் பொருட்கள் கிடைத்துள்ளன. அவற்றை ஆய்வு செய்ததில் அவை 2,600 ஆண்டுகள் பழமையானவை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கீழடியில் கிடைத்த பழமையான தொல்பொருட்களை ஆவணப் படுத்தும் நடவடிக்கையில் அதி காரிகள் ஈடுபட்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!