18 இலங்கை மீனவர்கள் கைது

18 இலங்கை மீனவர்கள் கைது

1 mins read

ராமேஸ்வரம்: இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோதமாக மீன் பிடித்த 18 இலங்கை மீனவர்களைக் கடலோர காவல் படை கைது செய்தது. அவர்களிடம் இருந்து எட்டு படகுகள் கைப்பற்றப்பட்டன. கைது செய்யப்பட்ட மீனவர்களும் படகுகளும் காரைக்கால் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு விசாரணை நடப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.