சென்னை: சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் டெங்குவை கட்டுப்படுத்த 30 நடமாடும் மருத்துவக் குழு வாகனம், 100 நிலவேம்பு கசாயம் வழங்கும் வாகனம், 30 கொசு ஒழிப்பு எந்திரம் ஆகியவற்றை நேற்று தொடங்கிவைத்தார். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் இவை செயல்படும்.
இதற்கிடையே திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கிக் காய்ச்சலைக் கட்டுப்படுத்த 45 நடமாடும் மருத்துவக் குழுவை நேற்று ஆட்சியர் மகேஸ்வரி தொடங்கி வைத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “45 நடமாடும் மருத்துவக் குழுவில் ஒரு வாகனத்தில் ஒரு மருத்துவர், ஒரு செவிலியர், ஒரு உதவியாளர், ஓட்டுநர் ஒருவர் இருப்பார்கள். இவர்கள் காய்ச்சல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டு வருவார்கள்,” என்றார்.
வேலுார் மாவட்டத்தில் 167 பேர் டெங்கிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தமிழக சுகாதாரத்துறை கூடுதல் இயக்குநர் சோமசுந்தரம் கூறினார்.
“இப்போது அரசு மருத்துவமனைகளில் டெங்கி பாதிப்பால் 167 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்,” என்று கூறினார்.