ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையைச் சேர்ந்தவர் மணிவேல். இவருடைய மனைவி சுகன்யா வயது 27. இவர்களுக்கு ஆறாண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று இரு ஆண் குழந்தைகள் உள்ளனர். மணிவேல் கோவையில் எலெக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். சுகன்யாவிற்கு அவரது வீட்டிற்கு அருகில் வாடகைக்கு குடியிருந்த சினேகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அதை சுகன்யாவின் கணவர் மணிவேல் கண்டித்துள்ளார்.
இதனால் கோபமடைந்த சுகன்யா நேற்று முன்தினம் குழந்தைகளை வீட்டில் தனியாக விட்டுவிட்டு சினேகாவுடன் மாயமாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. தொண்டி போலிசார் சுகன்யாவைத் தேடி வருகின்றனர். தாயைக் காணாததால் சுகன்யாவின் இரு குழந்தைகளும் தவித்து வருகின்றனர்.