திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே ஆரம்ப சுகாதார நிலையத்தில் இறந்ததாகக் கூறப்பட்ட கா்ப்பிணி யைத் திருப்பத்தூா் அரசு மருத்துவா்கள் உயிருடன் காப்பாற்றினர்.
நிறைமாத கார்ப்பிணியான செல்வராணி, 26, என்பவருக்குப் பிரசவம் ஆகவிருந்த நிலையில் அவருடைய கர்ப்பப்பைக்குச் செல்லும் ரத்தக்குழாய் திடீரென வெடித்துவிட்டது.
நிம்மியம்பட்டி என்ற ஊரில் உள்ள ஆரம்பர சுகாதார நிலைய மருத்துவ அதிகாரிகள், செல்வராணியும் அவருடைய வயிற்றில் வளரும் குழந்தையும் இனி பிழைக்க வழி இல்லை என்று கூறி திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அவர்களை அனுப்பிவிட்டனர்.
நள்ளிரவு நேரத்தில் அந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட செல்வராணிக்குச் சிகிச்சை அளிப்பதற்காக சிறப்பு மருத்துவர் இரவு நேரத்தில் மருத்துவமனைக்கு விரைந்ததாகவும் உடனடியாக அவருக்குக் கர்ப்பப்பையிலும் சிறுநீரகத்திலும் அறுவைசிகிச்சை செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.
நான்கு மணி நேரம் நடந்த சிகிச்சைக்குப் பிறகு செல்வராணி உயிர் தப்பிவிட்டார்.
ஆனால் அவருக்குப் பிறந்த குழந்தை இறந்துவிட்டது என்று அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர். இத்தகைய நிறைமாத கர்ப்பிணியைப் பிழைக்க வைத்தது பெரிய சாதனை என்று கூறப்படுகிறது.