சுர்ஜித் மரணம்: போலிஸ் வழக்குப் பதிவு

மணப்பாறை: ஆழ்துளைக் கிணற்றில் விழுந்து 82 மணி நேரம் முயன்றும் மீட்கப்பட முடியாமல் உயிரிழந்த சிறுவன் சுர்ஜித் மரணம் குறித்து மணப்பாறை போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

சுர்ஜித் உயிரிழந்தது குறித்து வேங்கைக்குறிச்சி கிராம நிர்வாக அலுவலர் உசேன் பீவி, மணப்பாறை போலிசில் புகார் அளித்ததை அடுத்து சிறுவன் சுர்ஜித் மரணத்தைச் சந்தேக மரணம் என ஐபிசி பிரிவு 174-ன் கீழ் மணப்பாறை போலிஸ் வழக்காகப் பதிந்தது.

இதுகுறித்து விசாரணை நடத்த காவல் ஆய்வாளர் முத்துக்குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதுபோன்ற விபத்துகளில் இவ்வாறு வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வழக்கை முடித்துவைப்பது ஒரு நடைமுறை ஆகும்.

இந்த நடைமுறை எளிதாக முடிந்துவிடும் என்றாலும் சிறுவன் மரணம் தமிழக அரசியலிலும் இதர பல விவகாரங்களிலும் தொடர் விளைவுகளை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. ஆழ்துளை குழியில் விழுந்துவிடும் சிறுவர்களை மீட்க பின்பற்றவேண்டிய நியதிகளும் போதிய அளவுக்குத் தொழில்நுட்பமும் தமிழகத்தில் இல்லை என்பது தெரியவந்துள்ளது. மணப்பாறை சம்பவம் அரசியலாகும் நிலையும் தலைதூக்கி இருக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!