சென்னை: தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜனின் சென்னை வீட்டை முற்றுகையிட்டு திமுகவினர் நடத்திய போராட்டம் காரணமாக பரபரப்பு ஏற்பட்டது.
திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் குறித்து அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்த கருத்துக்கு திமுகவினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இதையடுத்து அமைச்சர் வீட்டிற்கு முன்பு திமுகவினர் போராட்டம் நடத்திய நிலையில், மு.க. ஸ்டாலின் குறித்து பேசுவதற்கு அமைச்சர் பாண்டியராஜனுக்கு எந்தவித தகுதியும் இல்லை என திமுக எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சருமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அமைச்சர் பாண்டியராஜன் தாம் கடந்துவந்த அரசியல் பாதையை நினைத்து தன் முகத்தை ஒருமுறை கண்ணாடியில் பார்த்துக் கொள்ள வேண்டும் என அறிக்கை ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
பாஜக, தேமுதிக, அதிமுக என்று பல கட்சிகளில் அடுத்தடுத்து சேர்ந்த பாண்டியராஜன் ஓர் அரசியல் வியாபாரி என்றும், திமுக தலைவரின் தியாகத்தை அவர், விமர்சிப்பது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்றும் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.