சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே எஸ்பிஐ வங்கி ஏடிஎம்மில் ரூ.200க்குப் பதில் ரூ.500 வந்ததால் வாடிக்கையாளர்கள் போட்டிபோட்டு பணம் எடுத்தனர்.
தகவல் அறிந்து வந்த வங்கி அதிகாரிகள் ஏடிஎம் மையத்துக்கு பூட்டு போட்டனர். ரூ.200 வைக்க வேண்டிய இடத்தில் ரூ.500 வைக்கப்பட்டதே பணம் மாறி வந்ததற்கான காரணம் என்றும் பணத்தை மாற்றி வைத்த தனியார் நிறுவனமே பண இழப்புக்குப் பொறுப்பு எனவும் வங்கி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.