பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் பாரம்பரிய மருத்துவம், எலக்ட்ரோ ஹோமியோபதி என்னும் பெயரில் கடந்த 20 ஆண்டுகளாக பொதுமக்களுக்குச் சிகிச்சை அளித்து வந்த இரு போலி மருத்துவர்களைப் போலிஸ் கைது செய்தது.
பொள்ளாச்சி, நாச்சிமுத்து கவுண்டர் வீதியில் பத்மா கிளினிக் என்ற பெயரில் மருத்துவமனை நடத்தி வந்த பத்ரா, 50, என்பவரும் பொள்ளாச்சி திருநீலகண்டர் வீதியில் கிட்னி, கேன்சர் ஆராய்ச்சி மையம் என்ற பெயரில் மருந்தகம் நடத்தி வந்த ராமச்சந்திரன், 58, என்பவரும் விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.