போலிஸ் வாகனம் மோதி பெண் மரணம்; முதல்வர் உதவி

தென்காசி: நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள சொக்கம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பயணிகள் சிலர் தென்காசி செல்வதற்காக திரிகூடபுரம் பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த போலிஸ் வாகனம் ஒன்று கண்ணிமைக்கும் நேரத்தில் பயணிகள் கூட்டத்தில் புகுந்தது.

அவர்கள் அலறியடித்து ஓடினர். இருந்தபோதிலும் அந்த வாகனத்தில் சிக்கி பெண் ஒருவர் மாண்டார். அவர் திரிகூடபுரத்தைச் சேர்ந்த மைதீன் பிச்சை மனைவி ஆயிஷா பானு, 44, என்று அடையாளம் காணப்பட்டது. இதர மூன்று பேர் படுகாயமடைந்தனர்.

விபத்து பற்றி அறிந்த முதல்வர் பழனிசாமி, ஆயிஷா பானு குடும்பத்திற்கு 3 லட்சம் ரூபாய்; பலத்த காயமடைந்தோருக்கு தலா, 50 ஆயிரம் ரூபாய்; லேசான காயமடைந்தோருக்கு தலா 25 ஆயிரம் ரூபாய் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

சாலையில் சென்று கொண்டு இருந்த போலிஸ் வேனின் டயர் திடீர் என்று வெடித்ததால் பயணிகளின் கூட்டத்துக்குள் அது புகுந்ததாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!