பேருந்துகள் மோதி ஓட்டுநர் பலி

பேருந்துகள் மோதி ஓட்டுநர் பலி

1 mins read

சென்னையில் இருந்து கேரளா நோக்கி சென்ற பர்வீன் என்ற தனியார் பேருந்தும் ஈரோட்டில் இருந்து சேலம் சென்ற ஒரு தனியார் பேருந்தும் சேலம் அருகே தாழையூர் என்ற இடத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் பர்வீன் பேருந்து ஓட்டுநரான விருதுநகரைச் சேர்ந்த பாஸ்கரன் என்பவர் அதே இடத்தில் உயிரிழந்தார். படுகாயம் அடைந்த 43 பயணிகள் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இரண்டு பேருந்துகளின் முன் பகுதிகளும் நொறுங்கி விட்டன. படம்: தமிழக ஊடகம்