சென்னை: தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினமே தொடங்கிவிட்டது.
இந்த நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்தது.
சென்னையில் 48 மணி நேரத்திற்கு பரவலாக மழை பெய்யக்கூடும் என்றும் அது கூறியது.
வானிலை மையத்தின் கூற்றிற் கேற்ப நேற்று முன்தினம் மாலை முதல் சென்னையின் பல்வேறு பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
நேற்று அதிகாலை முதல் கனமழை வெளுத்து வாங்கியதால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நின்றது. இதனால் காலையில் வேலைக்குச் சென்ற வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர்.
வீட்டிலிருந்து மாணவ, மாணவி களும் வெளியே வர சிரமப்பட்டுப் கொண்டிருந்தனர்.
இதற்கிடையில் தொடர் மழை காரணமாக சென்னையில் நேற்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படும் என்று எதிர்பார்க்கப் பட்டது. இதற்காக காலை முதல் தொலைக்காட்சி செய்திக்கு முன் மாணவர்கள் ஆவலுடன் காத்திருந்த னர். ஆனால் சென்னையில் வழக்கம் போல் பள்ளிகள் இயங்கும் என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி அறிவித்தார். இதனால் மாணவ, மாணவிகளுக்கு ஒரு பக்கம் ஏமாற்றம் ஏற்பட்டாலும் மறுபக்கம் மழையில் உற்சாகமாக பள்ளிக்குப் புறப்பட்டனர்.