சென்னை: தூத்துக்குடி மக்களவைத் தேர்தல் தொடர்பில் தொடுக்கப்பட்டுள்ள வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி அத்தொகுதி உறுப்பினர் கனிமொழி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்துவிட்டது.
நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு கனிமொழி வெற்றி பெற்றார். இவரது வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சந்தான குமார் என்பவர் தேர்தல் வழக்குத் தொடர்ந்தார். இந்த வழக்கைத் தள்ளுபடி செய்யக்கோரி கனிமொழி மனுத்தாக்கல் செய்தார்.
கனிமொழியின் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால், வெற்றியை எதிர்க்கும் சந்தான குமாரின் மனு மீது விசாரணை தொடர்ந்து நடக்கும் என்று தெரிகிறது.