சாதிவெறியால் மகளை எரித்துக்கொன்ற தாய்

நாகப்பட்டினம்: தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞரை காதலித்த தனது 17 வயது மகளை தீயிட்டுக் கொளுத்தி கொலை செய்துள்ளார் ஒரு தாய்.

நாகப்பட்டினம் அருகே நடந்த கொடூரச் சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது.

கண்ணன் - உமா மகேஸ்வரி தம்பதியின் 17 வயது மகள் ஜனனி. 12ம் வகுப்பு படித்து வந்த ஜனனிக்கு அதே பகுதியைச் சேர்ந்த ராஜகுமார் என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. இதை விரும்பாத ஜனனியின் பெற்றோர், அவருக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்தனர். இது குறித்த தகவல் அறிந்த இளைஞன் ராஜகுமார், ஜனனியைக் கூட்டிச்சென்று தனது உறவினர் வீட்டில் தங்க வைத்திருக்கிறார்.

இதையறிந்த ஜனனியின் பெற்றோர் தனது மகளை ராஜ்குமார் கடத்தியதாக காவல்துறையில் மனுக்கொடுத்தனர். அதையடுத்து போலிசார், இரு தரப்பினரையும் அழைத்து அறிவுரை கூறி சமரசம் செய்து ஜனனியை அவரது பெற்றோருடன் அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு இந்த விவகாரம் தொடர்பாக ஜனனிக்கும் தாய் உமா மகேஸ்வரிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஜனனி மீது மண்ணெண்ணெய் ஊற்றி எரித்துக்கொன்ற அவரது தாய் உமா மகேஸ்வரி, தன் மீதும் தீ வைத்துக்கொண்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!