10 அடி ஆழ குழிக்குள் விரதமிருக்கும் சாமியார்; பாதாள லிங்கமும் அங்குண்டு

ஈரோடு மாவட்டம் அந்தியூருக்கு அருகில் 10 அடி ஆழக் குழி தோண்டி, அதில் பாதாள லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்து மௌன விரதம் இருந்துவரும் சாமியாரைக் காண அந்தப் பகுதியில் மக்கள் திரளாகச் சென்று வருகின்றனர்.

நல்லிக்கவுண்டன்புதூர் கிராமத்தைச் சேர்ந்த விஸ்வநாதன் என்பவருக்கு திருமணமாகி இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில், கடந்த 15 ஆண்டுகளாக அவர் துறவற வாழ்க்கை மேற்கொண்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆன்மிகத்தில் மிகுந்த நாட்டமுடைய அவர், அண்மையில் அமர்நாத் புனித யாத்திரை சென்றுவந்ததாகக் கூறப்படுகிறது. அதன் பின்னர் ‘நிஜானந்த காசி விஸ்வநாத சுவாமிகள்’ என்று தனது பெயரை மாற்றி வைத்துக்கொண்டார் அவர்.

10 அடி ஆழ குழி தோண்டி 48 நாட்கள் விரதம் இருந்தால் உலக நன்மை கூடிவரும் என்று அமர்நாத் புனித யாத்திரையின்போது துறவி ஒருவர் அவரிடம் கூறியதாக, பயணத்திலிருந்து திரும்பிய பிறகு ஊர்க்காரர்கள் சிலரிடம் இவர் கூறியுள்ளார்.

யாரும் எதிர்பாராத விதத்தில் 10 அடி ஆழக் குழி தோண்டி அதில் பாதாள லிங்கத்தையும் பிரதிஷ்டை செய்துள்ள அவர், கடந்த 17ஆம் தேதி முதல் உண்ணா நோன்பும் மௌன விரதமும் இருந்து வருகிறார்.

பெரும்பாலான சமயங்களில் தியானத்தில் இருக்கும் அவர், அங்கு வரும் பக்தர்களின் சந்தேகங்களுக்கான பதில்களை காகிதத்தில் எழுதிக்காட்டி தீர்த்து வருகிறாராம். குழிக்குள் வேறு யாரும் இறங்குவதில்லை. அங்கிருந்தவாறே பக்தர்களுக்கு ஆசி வழங்குகிறார் அவர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!