திண்டிவனம்: சிலை கடத்தல்கள் தொடர்பாகக் கடந்த 2019 ஜூலையில் நக்கீரன் இதழில் செய்தி ஒன்று வெளியானது. அந்தச் செய்தி, தமிழக அரசுக்கும் அமைச்சர்களுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்நோக்கத்துடன் வெளியிடப்பட்டதாக அமைச்சர் சி.வி.சண்முகம் குற்றம் சாட்டினார். மேலும், உண்மைக்குப் புறம்பான, ஆதாரமற்ற செய்தியை வெளியிட்ட நக்கீரன் ஆசிரியர் கோபால், தாமோதரன் மற்றும் பிரகாஷ் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டம் 499, 500, 501 ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக்கோரி, கடந்த ஆகஸ்ட் 8 ஆம் தேதி திண்டிவனம் நீதிமன்றத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து, நக்கீரன் இதழின் ஆசிரியர் கோபால் நீதிமன்றத்தில் முன்னிலையாகக் குற்றவியல் நடுவர் நளினிதேவி உத்தரவிட்டிருந்தார். அதன்படி நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையானார். ஆனால் குற்றவியல் நடுவர் நளினிதேவி விடுமுறையில் உள்ளதால் வழக்கு டிச.10 ஆம் தேதிக்குத் தள்ளிவைக்கப்பட்டது.
அவதூறு வழக்கில் நக்கீரன் கோபால் நீதிமன்றத்தில் முன்னிலை
22 Nov 2019 06:00 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 22 Nov 2019 08:45

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

கிரீஸில் நடந்த தடையோட்டத்தில் கலந்துகொண்ட இரு சிங்கப்பூரர்கள்

முதன்முறையாக ஆசியாவிற்கு வந்த ‘செலப்ரிட்டி எட்ஜ்’ எனும் பிரம்மாண்ட சொகுசுக்கப்பல்

மிரட்டத் தொடங்கியது மிச்சாங்: சீறும் சூறாவளிக் காற்று; பொதுமக்கள் அச்சம்

தரையிலிருந்து போர்விமானங்களைத் தாக்கக்கூடிய ஏஸ்டர் 30

இம்மாதம் 10ஆம் தேதி வரையில் பர்ச் சாலையில் உணவு திருவிழா

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!