மதுரை: மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்த எதிர்ப்பு தெரிவித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கறிஞர் ஒருவர் முறையீடு செய்துள்ளார். இதையடுத்து முறையீட்டை மனுவாக தாக்கல் செய்தால் நீதிமன்றம் விசாரிக்கும் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.
மாநகராட்சி மேயா், நகராட்சி, பேரூராட்சித் தலைவா்களை நேரடியாக வாக்காளா்களே தோ்வு செய்வதற்கான சட்டம் கடந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், மக்களால் தோ்வுசெய்யப்படும் வார்டு உறுப்பினா்கள் மேயா் உள்பட மூன்று உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவா்களைத் தோ்வு செய்வதற்கான சட்டத் திருத்த மசோதா பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநா் பன்வாரிலால் புரோகித் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்தார். இதனிடையே மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடைமுறைக்கு திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.