சென்னை: அக்டோபர் 1 முதல் இப்போது வரை தமிழகம் மற்றும் புதுவையில் 31 சென்டி மீட்டர் மழை பதிவாகியிருக்க வேண்டிய நிலையில் 9% குறைந்து 28 சென்டி மீட்டர் மழையே பதிவாகியுள்ளது. சென்னையில் வழக்கமாக
51 சென்டி மீட்டர் மழை பெய்திருக்க வேண்டும், ஆனால் 30 சென்டிமீட்டர் மழை மட்டுமே பதிவாகி உள்ளதாகவும் இது 41% குறைவு என்றும் அதிக பற்றாக்குறை எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில் வழக்கத்தைவிட 34 சதவிகிதம் மழை அதிகமாக பதிவாகி உள்ளதாகவும் கூறியுள்ளது.