கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டம் ஐரேணிபுரம் அருகே அயனிவிளைவில் இருக்கும் நாகதேவி கோயில் கிணற்றில் ஓரடி நீரில் சிக்கி தவித்த ஸ்டீபன் என்பரை தீயணைப்புப் படையினர் மீட்டனர்.
தான் தூங்கிக் கொண்டிருந்தபோது பல பேய்கள் தன்னை விரட்டியதாகவும் பயந்து ஓடியபோது கோயில் கிணற்றில் தான் விழுந்துவிட்டதாகவும் ஸ்டீபன் போலிசிடம் தெரிவித்தார்.
ஆனால் அவர் குதித்த கிணற்றில் பெரும் புதையல் இருப்பதாக அந்தப் பகுதியில் பல காலமாக கருத்து நிலவிவருகிறது.
புதையலை எடுப்பதற்காக தன் நண்பர்களின் உதவியுடன் ஸ்டீபன் கிணற்றில் இறங்கி இருக்கலாம் என்று போலிஸ் சந்தேகிக்கிறது.
கிணற்றில் குதித்தபோது காலில் காயம் அடைந்ததால் குழித்துறை மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ஸ்டீபனை விசாரிக்க போலிஸ் காத்திருக்கிறது.