23 வயதில் 8 பெண்களுடன் குடும்பம்: போலிசும் அதிர்ச்சி

பட்டுக்கோட்டை: தஞ்சை மாவட்டத்தில் எட்டு பெண்களிடம் பழகி ஒருவருக்கு ஒருவர் தெரியாமல் தனித்தனியாக குடும்பம் நடத்தி வந்த 23 வயது ஆடவரை போலிஸ் கைதுசெய்துள்ளது.

தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே ஒக்கநாடு கீழையூரைச் சேர்ந்த சந்தோஷ் என்ற அந்த ஆடவர், இளம் வயதில் இத்தனை பெண்களை ஏமாற்றி மணம் புரிந்து குடும்பம் நடத்தியது எப்படி என்பதை நினைத்து போலிஸ் அதிகாரி களும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூரில் பனியன் ஆலை ஒன்றில் வேலை பார்த்த சந்தோஷ், ஐந்து மாதங்களுக்கு முன் சத்யா என்ற கருவிழிக்காடு கிராமத்தைச் சேர்ந்த 20 வயது பெண்ணை மணம் புரிந்து திருப்பூரில் வாடகை வீட்டில் குடியேறினார்.

சுமார் 40 நாட்களுக்கு முன் சந்தோஷ், திடீரென்று காணாமல் போய்விட்டார். மனைவி சத்யா போலிசில் புகார் தெரிவித்தார்.

புலன்விசாரணை நடத்திய போலிசார், சந்தோஷ் தன் சொந்த ஊரான கீழையூரில் இருக்கிறார் என்பதைக் கண்டுகொண்டு சத்யாவையும் அழைத்துக்கொண்டு அங்கு சென்றனர். சசிகலா என்ற 19 வயதுப் பெண்ணுடன் சந்தோஷ் அங்கு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தது தெரியவந்தது.

போலிசாரும் சத்யாவும் சென்ற நேரத்தில் சந்தோஷ் வீட்டில் இல்லாததால் தந்திரமாக அவரை வரவழைத்து போலிஸ் அதிகாரிகள் அவரை மடக்கினர்.

பட்டுக்கோட்டை காவல் நிலையத்தில் முன்னிலையான சந்தோஷ், பிறகு சிறையில் அடைக்கப்பட்டார். அவரை விசாரித்தபோது அவர் இது போல் மொத்தம் எட்டு பெண்களை ஏமாற்றி அவர்களுடன் தனித் தனியாகக் குடும்பம் நடத்தி வந்திருக்கிறார் என்பது தெரியவந்தது. விசாரணை தொடர்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!