சென்னை: நாட்டிலேயே ஆதரவற்ற குழந்தைகளைக் காப்பாற்று வதற்காக அதிக உதவி மையங்களை அமைத்து பராமரிக்கும் மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு முதலிடம் பெற்றுள்ளது.
ஆதரவற்ற குழந்தைகள் தொடர்பான புள்ளிவிவரங்களை மக்களவையில் மத்திய குழந்தை கள் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டது.
அதில் நாட்டில் ஒட்டுமொத்த மாக 1,476 மையங்கள் செயல்படுவதாகவும் அவற்றின் மூலம் 64,364 குழந்தைகள் பராமரிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில்தான் 189 மையங்கள் செயல்படுவதாகவும் அவற்றின் மூலம் சுமார் 11,900 குழந்தைகள் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு கூறியிருக்கிறது.
குறிப்பாக இந்தியாவின் அதிக மக்கள்தொகை கொண்ட மாநில மான உத்தரப் பிரதேசத்தில் வெறும் 77 மையங்கள் அமைக்கப்பட்டு அதில் 3,162 குழந்தைகள் மட்டுமே பாதுகாக்கப்பட்டு வருவதாக கூறப்பட்டுள்ளது.