தமிழக அரசின் சார்பில் ரூ.10 லட்சம் நிதி வழங்கும் அமைச்சர்

சென்னை: இந்திய அரசு சார்பில் ஆண்டுதோறும் நடத்தப்படும் அனைத்துலகத் திரைப்பட விழா கோவா தலைநகர் பனாஜியில் கடந்த 20ஆம் தேதி முதல் நடந்து வருகிறது. இவ்விழாவில் சுமார் 200 நாடுகளில் இருந்து பிரதிநிதிகளும் 12,000க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்களும் கலந்துகொண்டுள்ளனர்.

இந்த விழாவில் தமிழக அரசின் சார்பில் செய்தி, விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்து கொண்டு பேசுகையில், “தமிழகத்தில் படப்பிடிப்பு நடத்த வரும் உலக திரைப்பட படைப்பாளிகளுக்கு படப்பிடிப்பு வசதிகளை செய்து தர அரசு எப்போதும் தயாராக இருக்கிறது.

“சென்னை திரைப்பட விழாவுக்கு இந்த ஆண்டு ரூ.75 லட்சம் ஒதுக்கீடு செய்து சென்னையை உலக திரைப்பட விழாக்களின் சந்தையாக தமிழக அரசு மாற்றியுள்ளது. விரைவில், ‘தமிழ்நாடு பிலிம் பெசிலிடேஷன்’ மையம் அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

“சென்னை அருகே பையனூரில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் பெயரில் பிரம்மாண்ட சினிமா படப்பிடிப்புத் தளம் தொடங்கப்பட்டுள்ளது. தமிழ் திரைப்படங்களுக்கு எளிதில் மானியம் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது,” என்று கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!