சென்னை: வெங்காய விலை அதிகரித்து வரும் சூழலில் யாராவது வெங்காயத்தை பதுக்கினால் கடும் தண்டனை விதிக்கப்படும் என்று செல்லூர் ராஜு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது டுவிட்டர் பதிவில், “தமிழகத்தில் உள்ள மொத்த விற்பனைக் கடைகள் 50 டன்னுக்கும் அதிகமாக வைத்துக்கொள்ளக்கூடாது என்றும் அதற்கு அதிகமாக வைத்திருந்தாலோ பதுக்கிவைத்திருந்து பிடிபட்டாலோ கடும் தண்டனைகள் வழங்கப்படும்,” என்று எச்சரித்துள்ளார்.
நாடெங்கிலும் வெங்காயத் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது. அத்துடன் வெங்காய விலையும் உச்சம் தொட்டுள்ளது. இதேபோல் தமிழகத்திலும் வெங்காய விலை உயர்வு கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் பல வணிகர்கள் வெங்காயத்தை பதுக்கி, விலையேற்றத்தின்போது விற்பதாகவும் புகார் எழுந்துள்ளது.