தென்காசி: திருநெல்வேலி, கன்னியாகுமரி, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாகவும் மற்ற மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அத்துடன் நேற்று முதல் வரும் 28 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவ மழை கடந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி தொடங்கியது. பருவமழை தொடங்கிய நாள் முதல் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்துவருகிறது. இதனிடையே மகா புயல், புல்புல் புயல் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டன.
வடகிழக்கு பருவமழை தீவிர மடைந்துள்ளதால் சென்னை உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நேற்று முன்தினம் கன மழை பெய்தது.
சென்னையின் பிரதான இடங்களில் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடியதால் வேலைக்குச் செல்லும் மக்களும் வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்கு ஆளாகினர்.