கல்வித் தகுதியே கோரப்படாத மாநகர துப்புரவாளர் வேலைக்கு குவிந்த பட்டதாரிகள்

கோவை மாநகராட்சியில் காலியாக இருக்கும் 549 நிரந்தர துப்புரவு பணியாளர்கள் வேலைக்கு 7,000 பேர் விண்ணப்பித்தனர்.

அவர்களுக்கான நேர்காணல், கோவையில் நடந்தது. தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்த 21 வயது முதல் 56 வயது வரையிலானவர்கள் வேலைக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

ஆனால், நேர்காணலுக்கு வந்தவர்களின் கல்வி தகுதியைக் கண்டு அதிகாரிகள் வியப்படைந்தனர். அங்கு வந்தவர்களில் சுமார் 70 விழுக்காட்டினர் குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு படித்திருந்தனர்.

இரண்டு பட்டங்களைப் பெற்றவர்கள், பொறியியல் பட்டதாரிகள், முதுநிலை பட்டதாரிகள் பலரும் துப்புரவாளர் வேலையின் நேர்காணலுக்கு வந்திருந்தனர்.

சிலர் கைக்குழந்தைகளுடன் நேர்காணலில் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.

ஒரே நேரத்தில் ஏராளமானவர்கள் வந்ததால் கூட்டத்தை கட்டுப்படுத்த போலிசாரின் உதவி நாடப்பட்டது.

நகரில் செய்யவேண்டிய துப்புரவு வேலைக்குப் பெரும் படிப்பு படித்தவர்கள் அதிக அளவில் குவிந்து இருப்பது மாநிலத்தில் வேலை இல்லாத நிலையை வெளிச்சம் போட்டு காட்டுவதாக கவனிப்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!