வேலூர்: கிலோ 20 ரூபாய்க்கு விற்ற வெங்காயம் 1 கிலோ 160 ரூபாய் என்று விலை ஏறிவிட்டதால் திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர் மாவட்டங்களில் 450 பிரியாணிக் கடைகள் மூடப்பட்டுவிட்டதாகவும் 2,000 பேர் வேலை இழந்துவிட்டதாகவும் வேலூர் மாவட்ட பிரியாணிக் கடை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அப்துல்லா தெரிவித்தார்.
“வெங்காய விலை உயர்வு காரணமாக வெங்காய தயிர் பச்சடி நிறுத்தப்பட்டுவிட்டது. கால் தட்டு இறைச்சி பிரியாணி விலை 170 ரூபாயாக உயர்ந்துவிட்டது.
“அன்றாடம் 1 கோடி ரூபாய்க்கு பிரியாணி வியாபாரம் நடக்கும். ஆனால் இப்போது ரூ.40 லட்சம் முதல் ரூ.50 லட்சம் வரைதான் வியாபாரம் நடக்கிறது.
“இந்த மாவட்டங்களில் உள்ள 1,200க்கும் மேற்பட்ட பிரியாணிக் கடைகளில் 5,000 பேர் வேலை பார்க்கிறார்கள். இவர்களில் 2,000 பேருக்கு அநேகமாக வேலை போய்விடும்,” என்று அப்துல்லா கவலையு டன் தெரிவித்தார்.
இதனிடையே, திண்டுக்கல் சந்தையில் 1 கிலோ முருங்கைக்காய் விலை ரூ.200 கூடி ரூ.800 ஆகிவிட்டது என்று தெரிவிக்கப்பட்டது.