சீமான்: நாம் தமிழர் ஆட்சியில் தெலுங்கானா பாணிதான்

சென்னை: நாம் தமிழர் ஆட்சிக்கு வந்தால் பலாத்கார சம்பவங்களுக்குத் தெலுங்கானாவில் போலிசார் எடுத்ததைப் போன்ற மரணதண்டனைதான் விதிக்கப்படும் என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்து உள்ளார்.

சென்னையில் அம்பேத்கர் நினைவு நாளில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தெலுங்கானாவில் நான்கு பேரை அந்த மாநில போலிஸ் சுட்டுக்கொன்ற தைத் தான் முழு மனதுடன் வரவேற்பதாகத் தெரிவித்தார்.

மரணம் என்பது எந்த ஒரு குற்றத்துக்கும் தண்டனையாக இருக்கக் கூடாது என்ற அவர், ஆனால் பெண்களைப் போகப்பொருளாக, போதைப்பொருளாக, நுகர்பொருளாகக் கருதி பாலியல் கொடுமைக்கு ஆளாக்கும் செயலுக்கு மரணத்தைத் தவிர வேறு எதுவும் தண்டனையாக இருக்காது என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பொள்ளாச்சி சம்பவத்தில் அவ்வளவு பெரிய குற்றம் செய்தவர்கள் மீதான குண்டர் சட்டம் 90 நாட்களில் ரத்து செய்யப்பட்டது கொடுமையானது என்றும் அது வரலாற்றுப் பெரும் பிழை என்றும் சீமான் கூறினார்.

“எந்த இடத்தில் பாலியல் கொடுமை செய்தார்களோ அதே இடத்தில் பொதுமக்கள் முன்னிலையில் நால்வரைச் சுட்டால்தான் மக்களிடம் அச்சம் பரவும். இல்லை எனில் 90 நாளில் வெளியே வந்துவிடலாம். எந்த குற்றமும் செய்யலாம் என்ற சிந்தனை வந்துவிடும்.” என்று நாம் தமிழர் கட்சி ஒருங் கிணைப்பாளர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!