சேலம் வந்த கர்நாடக போலிசை மடக்கிய தமிழக போலிஸ்

சேலம்: உள்ளூர் போலிசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் சேலத்திற்கு வந்து நடுசாலையில் இரவு நேரத்தில் வடமாநில இளைஞரைத் துப்பாக்கி முனையில் கைது செய்த பெங்களூர் போலிசை தமிழக போலிஸ் மடக்கியது.

சேலம் பால்மார்க்கெட் பகுதியில் வடமாநிலத்தைச் சேர்ந்த ஹரிஷ் என்பவர் மொத்த வர்த்தக மளிகைக் கடையை நடத்தி வருகிறார்.

சேலம் செரி ரோடு பகுதியில் சனிக்கிழமை இரவில் அவர் நின்றுகொண்டு இருந்தபோது, காரில் வந்த இரு நபர்கள் துப்பாக்கி முனையில் மிரட்டி அவரை காரில் ஏற்றிச்சென்றனர்.

அப்போது அங்கு சாதாரண உடையில் நின்றிருந்த ஆயுதப் படை காவல் உதவி ஆய்வாளர் ரவி என்பவர் அளித்த தகவலின் பேரில் அந்தக் காரை தமிழ்நாட்டின் கருப்பூர் போலிஸ் தடுத்து மடக்கியது.

விசாரணையில் தாங்கள் பெங்களூர் போலிசார் என்றும், அங்கு திருட்டுப்போன ரூபாய் 2 லட்சம் மதிப்புள்ள பான்பராக், குட்கா புகையிலைப் பொருட்களை வாங்கியது தொடர்பில், ஹரிஷை கைது செய்து அழைத்துச்செல்வதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து, பலவற்றையும் விசாரித்த கருப்பூர் போலிஸ் கடைசியில் புகார் நகலை பெற்றுக்கொண்டு ஹரிஷை அழைத்துச்செல்ல அனுமதித்தது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!