திருச்சி: கடந்த சில வாரங்களாக வெங்காய விலை உச்சத்தை தொட்டதால் சமையலில் வெங்காயத்தை சேர்க்க முடியாமல் இல்லத்தரசிகள் முதல் உணவுக் கடைக்காரர்கள் வரை பலரும் பெரும் சிரமப்பட்டனர். இந்த சிரமத்துக்கு இப்போது ஒரு விடிவுகாலம் பிறந்துள்ளது.
வெங்காயத் தட்டுப்பாட்டை போக்க எகிப்தில் இருந்து வெங்காயத்தை அரசு இறக்குமதி செய்ய முடிவெடுத்துள்ளது.
இந்நிலையில் திருச்சி வெங்காய மண்டி நிர்வாகிகள், நேரடியாகவே துருக்கி, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து 30 டன் பெரிய வெங் காயத்தை இறக்குமதி செய்து நேற்று விற்பனையைத் துவங்கினர்.
ரூ.100க்கு விற்பனை செய்யப்பட்ட இந்த எகிப்து வெங்கா யத்தை வாங்க மக்களிடையே ஆர்வம் இல்லாததால் ஒரு கிலோ ரூ.90க்கு விலை குறைத்து விற்கப் பட்டது. அப்போதும் அதை யாரும் வாங்க ஆர்வம் காட்டவில்லை.
அளவில் மிகப்பெரிய வெங்காயமாக இருப்பதால் ஒரு கிலோவுக்கு 4 வெங்காயம் மட்டுமே இருப்பதாகவும் அதனால் இதனை வீட்டில் பயன்படுத்த பொதுமக்கள் ஆர்வம் காட்டவில்லை என்றும் கூறப்படுகிறது.
வெங்காய மண்டி நிர்வாகி தங்கராஜ் கூறுகையில், “ஜனவரி வரை சின்ன வெங்காயம் விலை குறைய வாய்ப்பு இல்லை. வெங்கா யத் தட்டுப்பாட்டை சமாளிக்க வெங்காய மண்டி தரகர்கள் இணைந்து எகிப்து நாட்டில் இருந்து 30 டன் பெரிய வெங்காயம் இறக்கு மதி செய்துள்ளோம். இதனால், கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்கிறோம்,” என்று கூறினார்.