சென்னை: தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் சார்பில் சென்னை, மதுரையில் 162.64 கோடி ரூபாயில் கட்டப்பட்டுள்ள 610 குடியிருப்புகளை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று ‘வீடியோ கான்பரன்ஸ்’ வாயிலாக திறந்துவைத்தார்.
சென்னை, எம்.கே.பி.நகர் திட்டப் பகுதியில் 2.46 ஏக்கரில் 129.50 கோடி ரூபாய் மதிப்பில் 15 தளங்களுடன் 510 குறைந்த வருவாய் பிரிவுக்கான குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன.
ஒவ்வொன்றும் இரண்டு படுக்கை அறைகள், ஹால், சமையல் அறை, படுக்கை அறை யுடன் இணைந்த கழிவறை, குளியல் அறையுடன் கட்டப்பட்டுள்ளது
சென்னை, முகப்பேர், ஜெ.ஜெ. நகர் கிழக்கில் நான்கு தளங்க ளுடன் 12.70 கோடி ரூபாயில் 40 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; புலியூரில் 11.97 கோடி ரூபாயில் நான்கு தளங்க ளுடன் 48 மத்திய வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள்; மந்தவெளி பாக்கத்தில் 2.96 கோடி ரூபாயில் நான்கு தளங்களுடன் 12 உயர் வருவாய் பிரிவு அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன
மதுரை, சாத்தமங்கலம் கிராமம், அண்ணா நகரில் 5.51 கோடி ரூபாயில், மூன்று தளங்களுடன் கூடிய ‘அம்மா திருமண மண்டபம்’ கட்டப் பட்டுள்ளது. இவை அனைத்தை யும் முதல்வர் பழனிசாமி நேற்று, தலைமை செயலகத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக திறந்து வைத்தார்.