மயிலாடுதுறை: மயிலாடுதுறையைத் தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டம் அமைக்க முதல்வரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக அமைச்சர் ஓ.எஸ். மணியன் தெரிவித்துள்ளார்.
சீர்காழி அரசு மருத்துவமனையில் 15 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட ரத்த பரிசோதனைக் கூடத்தை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் ஓர் அரசு மருத்துவக் கல்லூரி என அறிவித்துள்ளதன் அடிப்படையில் மயிலாடுதுறையில் மருத்துவக்கல்லூரி அமையும் என்றார்.