சென்னை: உதயநிதி ஸ்டாலின் தலைமையின் கீழ் மிக விரைவில் திமுக இளையர் அணியில் 50 லட்சம் புதிய உறுப்பினர்கள் சேருவார்கள் எனத் தாம் நம்புவதாக திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய அவர், தாம் பொறாமைப்படும் அளவுக்கு உதயநிதி ஸ்டாலின் செயல்பட வேண்டும் என விரும்புவதாகக் குறிப்பிட்டார்.
உதயநிதி மீது தமக்கு நம்பிக்கை இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், காலஞ்சென்ற திமுக தலைவர் கருணாநிதியிடம் தாம் வாங்கிய பேரை உதயநிதி தம்மிடம் பெறவேண்டும் என்றார்.