மருத்துவக் கல்லூரி யாருக்கு: நாகை, மயிலாடுதுறை தீவிரம்

நாகை: தமிழ்நாட்டில் புதிதாக அமையவிருக்கும் மருத்துவக் கல்லூரிகளில் ஒரு கல்லூரி நாகை அருகே அமைக்கப்படும் என்றும் அதற்கு மத்திய அரசு அனுமதி அளித்து இருப்பதாகவும் அண்மையில் அறிவிப்பு வெளியானது.

ஆனால் அந்தக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க வேண்டும் என்று அந்த வட்டார மக்கள் பல போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மயிலாடுதுறை தனி மாவட்டமாக ஆவதற்குப் பல தகுதிகள் இருந்தும் இன்னமும் அது நாகை மாவட்டத்தின் பகுதியாகவே இருக்கிறது என்று கவலை தெரிவிக்கும் அந்த வட்டாரவாசிகள், நாகைக்கு அருகே திருவாரூர், தஞ்சாவூர் போன்ற இடங்களில் மருத்துவக் கல்லூரிகள் இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள்.

மருத்துவக் கல்லூரிக்கு இலவசமாக நிலம் வழங்க பலர் முன் வந்தும் மயிலாடுதுறையில் அந்தக் கல்லூரியை அமைக்க தயக்கம் காட்டக்கூடாது என்று கூறும் அவர்கள், இதன் தொடர்பில் முதலமைச்சரைச் சந்திக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.

இந்நிலையில், மருத்துவக் கல்லூரிப் பணிகள் விரைவாகத் தொடங்க வேண்டும் என்று கேட்டு நாகை வட்டாரவாசிகள் கடையடைப்பு, வேலை நிறுத்தப் போராட்டங்கள் போன்றவற்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்தப் போராட்டத்தில் வழக்கறிஞர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் சேர்ந்துகொண்டுள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!