மதுரை: மதுரை சிங்கம்பிடாரி கோவில் தெருவைச் சேர்ந்த குமார் என்பவர், ஐந்து ஆண்டுகளுக்கு முன் மதிமுக கட்சிப் பிரமுகர் நாகராஜன் என்பவரிடம் 5 பைசா வட்டிக்கு ரூ. 2 லட்சம் கடன் வாங்கினார்.
அதைச் சரிவர அடைக்காததால் குமார் ஊரில் இல்லாத நேரத்தில் நாகராஜன் 15 பேர் கொண்ட கும்பலுடன் வந்து கட்டடம் இடிக்கும் வாகனத்தைக் கொண்டு குமாரின் வீட்டை தரைமட்டமாக்கிவிட்டார்.
குமார் செய்த புகார் அடிப்படையில் நாகராஜன் மீது ஐந்து பிரிவுகளின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.