கள்ளத்தோணி மூலம் இலங்கை செல்ல முயற்சி

ராமேசுவரம்: தனுஷ்கோடியில் இருந்து கள்ளத்தோணி மூலம் இலங்கைக்கு செல்ல முயன்ற பெண்கள் உள்பட 6 அகதிகளை தனுஷ்கோடி போலிசார் கைது செய்தனர்.

நேற்று முன்தினம் நள்ளிரவு வேளையில் 2 பெண்கள் உள்பட அந்த ஆறு பேரையும் தனுஷ்கோடி அருகே உள்ள கோதண்டராமர் கடற்கரைப் பகுதியில் போலிசார் கண்டனர்.

இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடந்தது. அப்போது அவர்கள் அனைவரும் இலங்கையின் யாழ்ப்பாணம் மற்றும் திரிகோணமலையைச் சேர்ந்தவர்கள் என்பதும், கடந்த 2013ஆம் ஆண்டில் அகதிகளாக தமிழகம் வந்தவர்கள் என்பதும் தெரியவந்தது.

ஆறு பேரும் சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் தங்கி இருந்தனர்.

இந்நிலையில் முகவர் ஒருவர் மூலம் இலங்கை செல்ல முடிவு செய்த இவர்கள், கள்ளத்தோணி மூலம் செல்ல முயற்சித்துள்ளனர்.

தனுஷ்கோடி கடற்பகுதியில் காத்திருந்தபோது, கள்ளத்தோணி வர தாமதமானதால் ஆறு பேரும் போலிசில் சிக்கிக் கொண்டனர்.

இதையடுத்து அவர்களிடம் கியூ பிரிவு போலிசார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு உதவி செய்வதாகக் கூறிய முகவருக்கு வலைவீசப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!