ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் யூடியூப் ஒளிவழி மற்றும் செயலி மூலம் முதலீடு செய்தால், செய்திகள், விளம்பரங் களைப் பார்த்தால் பல கோடி ரூபாய் சம்பாதிக்கலாம் என்று ஆசை காட்டி மோசடி செய்த பிரவீன் குமார், 25, பிரபாகரன், 25, என்ற பொறியியல் பட்டதாரிகள் இருவரை போலிஸ் கைது செய்து விசாரிக்கிறது.
‘ஏப்பெக்ஸ் டிஜிட்டல் சேனல்’ என்ற பெயரில் ஒரு செயலியை நிர்வகித்த அவர்கள், ‘ஏப்பெக்ஸ் வெப் சர்வீசஸ் அண்டு ஆன்லைன் எஜூகேஷன் லிமிடெட்’ என்ற பெயரில் செய்திகளைப் பகிரும் நிறுவனம் ஒன்றைத் தொடங்கியதாகவும் தெரிகிறது.
ஆந்திர மாநிலம் செகந்திராபாத்தில் பதிவு செய்யப்பட்டதாகக் கூறி போலி வருமான வரி ஆவணங்கள் மூலம் இந்த நிறுவனத்தை அவர்கள் விளம்பரப்படுத்தியுள்ளனர்.
ஏப்பெக்ஸ் நிறுவனத்தின் விளம்பரங்கள் மூலம் கிடைக்கும் வருவாயில் அதிகபட்சம் 400% லாபம் ஈட்டலாம் என அறிவித்து அவர்கள் பலரையும் ஏமாற்றி இருப்பதாகக் கூறப்படுகிறது.