ஏடிஎம்மில் பணத்தை நிரப்ப வந்த ஓட்டுநர் ரூ.52 லட்சத்துடன் மாயம்

ஆலந்தூர்: சென்னை வேளச்சேரி யில் இயங்கும் வங்கி ஏடிஎம்மில் பணத்தை நிரப்புவதற்காக வந்த வேன் ஓட்டுநர் ஒருவர், அந்தப் பணத்தை முறையாக ஏடிஎம்மில் நிரப்பாமல் ரூ.52 லட்சம் பணத்துடன் தப்பியோடி உள்ளார். தப்பியோடிய ஓட்டுநரை போலிசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

சென்னை தியாகராயர் நகரில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்று ஏடிஎம்களில் பணத்தை நிரப்பும் பணியைச் செய்து வருகிறது.

இந்த நிறுவனத்தின் மேற்பார்வையாளரான அசோக் நகரைச் சேர்ந்த வினோத், 28, பணம் நிரம்பும் ஊழியரான கே.கே.நகரைச் சேர்ந்த வினோத், 26, துப்பாக்கி ஏந்திய பாதுகாப்பு ஊழியரான பீகாரைச் சேர்ந்த முகமது, 27, ஆகியோர் காரில் லட்சக் கணக்கான பணத்துடன் வந்தனர். காரை வேளச்சேரியைச் சேர்ந்த ஓட்டுநர் அம்புரோஸ், 40, ஓட்டி வந்தார்.

தேனாம்பேட்டையில் உள்ள 5 வங்கி ஏடிஎம் மையங்களில் பணத்தை நிரப்பிவிட்டு, வேளச்சேரிக்கு ரூ.87 லட்சத்துடன் வந்தனர்.

வேளச்சேரி விஜயநகரில் உள்ள விஜயா வங்கி ஏடிஎம்மில் பணம் நிரப்புவதற்காக மேலாளர், ஊழியர், பாதுகாவலர் ஆகியோர் இற​ங்கிச் சென்றுள்ளனர். காரில் மீதம் ரூ.52 லட்சத்தை வைத்திருந்தனர்.

அப்போது எதிரே லாரி வந்ததால் காரை ஓரமாக நிறுத்துவதாக கூறி ஓட்டுநர் அம்புரோஸ் காரை எடுத்துச்சென்றார்.

போனவர் போனதுதான். திரும்பி வராமல் பணத்துடன் மாயமானார்.எங்கு தேடியும் அவரைக் காணாத தால் இதுகுறித்து போலிசாருக்கு தகவல் பறந்தது.

இந்நிலையில், பணம் நிரப்ப வந்த மற்ற மூவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வேளச்சேரி முகவரியில் ஓட்டுநர் இல்லாததும் தெரியவந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!