தந்தையை பராமரிக்காத மகனின் சொத்துகள் பறிமுதல்

நெல்லை: நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டையில் தந்தையை முறைப்படி பராமரிக்காத மகனிடம் இருந்து சொத்துகளைப் பறிமுதல் செய்த மாவட்ட ஆட்சியர் அதை தந்தை பூதத்தானிடமே திருப்பிக் கொடுத்துள்ளார்.

நெல்லை பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகரைச் சேர்ந் தவர் பூதத்தான் பிள்ளை, 85. இவர் கட்டடத் தொழிலாளியாக வேலை செய்துவந்தார்.

இவருடைய மகன் முருகன், அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார்.

கடந்த 2015ல் பூதத்தான் தனக்கு சொந்தமான 7 வீடுகளையும் முருகனுக்கு பத்திரம் எழுதிக் கொடுத்தார். அந்த வீடுகளை முருகன் அவருடைய மனைவி சாந்தியின் பெயருக்கு மாற்றியுள்ளார்.

சொத்துகளை எழுதி வாங்கிய போது தனது தந்தையைப் பரா மரிப்பதாக உறுதியளித்த முருகன், அண்மையில் தந்தையை வீட்டில் இருந்து விரட்டி அடித்துள்ளார்.

இதுதொடர்பாக பூதத்தானுக்கும் முருகனுக்கும் தகராறு ஏற்பட ஆத்திரமடைந்த முருகன் தந்தையை அரிவாளால் வெட்டினார்.

இதுகுறித்து உதவி ஆட்சியர் மணிஷ் நாரணவரே விசாரணை நடத்திய பின்னர், பூதத்தான் முருக னுக்கு எழுதிக்கொடுத்த சொத்து களுக்கான பத்திரத்தை ரத்து செய்து உத்தரவிட்டார்.


 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!