மங்கலம்பேட்டை: வண்ண உடையின்றி பள்ளிச் சீருடையுடன் சென்ற ஏழை மாணவன் ஒருவனுக்கு உடை வாங்கிக் கொடுத்த போலிஸ் உதவி அதிகாரிக்கு சமூக வலைத் தளங்களில் பாராட்டுகள் குவிகின்றன.
கடலுார் மாவட்டம், மங்கலம்பேட்டையை அடுத்த ஆலடி காவல் நிலையத்தில் போலிஸ் அதிகாரியாகப் பணிபுரிபவர் ராதாகிருஷ்ணன்.இவர் ஆலடி பகுதியில் ரோந்து சென்றபோது மாணவர்கள் வண்ண உடைகளில் சென்றனர். அதில் ஒரு மாணவர் மட்டும் சீருடையில் சென்றார். அந்த மாணவரிடம் விசாரித்தபோது, தான் கடலுார் புதுக்கடை தெருவைச் சேர்ந்த ஆறுமுகம் மகன் தொல்காப்பியன் என்றும் போதிய வசதி இல்லாததால் ஆலடியில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி இரண்டாம் வகுப்பு படித்து வருவதாகவும் கூறினார்.
பள்ளியில் தந்த இரு சீருடைகள் மட்டுமே தன்னிடம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து ராதாகிருஷ்ணன் அச்சிறுவனுக்கு இரு ஜோடி வண்ண உடைகளை வாங்கிக் கொடுத்தார். படம்: ஊடகம்
ஏழை மாணவனுக்கு உடை வாங்கித் தந்த அதிகாரிக்குப் பாராட்டு
21 Dec 2019 06:10 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 21 Dec 2019 10:53

Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்

800 ஹெக்டர் நில மீட்புத் திட்டம்

இந்தியப் பணிப்பெண்ணுக்குச் சொந்த ஊரில் வீடு வாங்கித் தந்த சிங்கப்பூர்க் குடும்பம்

சிங்கப்பூர் வரலாற்றில் தடம் பதித்த தீமிதித் திருவிழா

பாசிர் ரிஸ் பூங்கா கடற்கரையில் 'உறவுகள் ஒன்றுகூடல் 2023'

உதவி தேவைப்படும் குழந்தைகளுக்கான முதலீடு எதிர்காலத்தில் ஏழுமடங்கு நன்மை தரும்

தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!