பொன்னுசாமி சித்தர் மூங்கில் அடிகளார்: தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்த வேண்டும்’

தஞ்சாவூர்: கோவில் கருவறைகளில் பூசை செய்பவர்கள் தமிழர்களாக இருக்க வேண்டும் என்று சிவனடியார்கள் எனத் தங்களைக் கூறிக்கொள்ளும் சிலர் வலியுறுத்தி உள்ளனர்.

யாக பூசைகள் அனைத்தும் கோவில் வளாகத்துக்குள் தமிழ்மொழியில் நடைபெற வேண்டும் என்றும் அவர்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.தஞ்சை பெருவுடையார் கோவில் குடமுழுக்கு அடுத்த ஆண்டு (2020) பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடக்கிறது. இதற்கான பணிகள் தற்போது துரித கதியில் நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் இந்து வேத மறுமலர்ச்சி இயக்க தலைவரும், பதினெண் சித்தர் மடத்தின் தலைவ ருமான பொன்னுசாமி சித்தர் மூங்கில் அடிகளார் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிவனடி யார்கள் நேற்று முன்தினம் பெரிய கோவிலுக்கு வந்து குடமுழுக்குப் பணிகளைப் பார்வையிட்டனர்.
இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொன்னுசாமி சித்தர், தஞ்சை பெருவுடையார் கோயில் குடமுழுக்கை தமிழ் முறைப்படி நடத்தவேண்டும் என்றார்.

“கடந்த 1997ஆம் ஆண்டு தஞ்சை பெருவுடையார் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தபோது தீ விபத்து ஏற்பட்டு 48 பேர் இறந்தனர். அதன்பிறகு இரு தினங்களில் எந்தவித முறையான பரிகாரமும் செய்யாமல் அவசர கோலத்தில் குடமுழுக்கு நடத்தப்பட்டது. எனவே பரிகாரப் பூசைகள் செய்யப்பட வேண்டும்,” என்றார் பொன்னுசாமி சித்தர். பெருவுடையார் கோவிலில் சித்தர் நெறிப்படி தமிழில் பூசைகள் நடக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது தொடர்பாக அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளதாகத் தெரிவித்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!