மத்திய அரசு: நிர்வாகத் திறனில் இந்தியாவில் தமிழகம் முதலிடம்

புதுடெல்லி: இந்தியாவில் பல்வேறு துறைகளின் செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு பார்க்கையில் நிர்வாகத் திறனில் தமிழகம் முதலிடம் வகிப்பதாக மத்திய அரசின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டிலேயே நிர்வாகத் திறனில் தமிழகம் 5.62 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்துள்ளதாக தேசிய நல்லாட்சி தினத்தையொட்டி மத்திய நிர்வாக சீர்திருத்தத் துறை அமைச்சு வெளியிட்ட புள்ளிவிவரப் பட்டியல் தெரிவிக்கிறது.

இதில் 5.40 புள்ளிகளுடன் மகாராஷ்டிரம் இரண்டாவது இடத்திலும் 5.10 புள்ளிகளுடன் கர்நாடகம் 3வது இடத்திலும் உள்ளன.

பொருளியல் நிர்வாகத்தைப் பார்க்கையில், 18 பெரிய மாநிலங்கள் அடங்கிய பட்டியலில் தமிழகத்துக்கு 5வது இடம் கிடைத்துள்ளது.

அந்தப் பட்டியலில் பொது சுகாதாரத்தில் கேரளம் முதல் இடம் பிடித்துள்ளது. மொத்தத்தில் கேரளம் 8வது இடத்திலும் தெலுங்கானா 11வது இடத்திலும் உள்ளன.

பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, நீதி, உள்கட்டமைப்பு துறைகளில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. சுகாதாரத்தில் 2வது இடத்தையும் சுற்றுச்சூழலில் 3வது இடத்தையும் வேளாண்மையில் 9வது இடத்தையும் வணிகத்தில் 14வது இடத்தையும் சமூக நலனில் 7வது இடத்தையும் தமிழகம் பிடித்து உள்ளது. மொத்தமாகப் பார்க்கையில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு தெரிவிக்கிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!