சிறுமி பாலியல் வன்கொடுமை, கொலை வழக்கில் சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை

கோவை: கோவை, துடியலூர் அருகே 7 வயது சிறுமியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கின் தொடர்பில் குற்றவாளி சந்தோஷ் குமாருக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டுள்ளது.

கோவை துடியலூர் அருகே உள்ள பன்னிமடையில் 7 வயது சிறுமி, கடந்த மார்ச் மாதம் அவரது வீட்டின் அருகே சடலமாக மீட்கப் பட்டார். பிரேதப் பரிசோதனையில் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இவ்வழக்கின் தொடர்பில் அதே பகுதியைச் சேர்ந்த சந்தோஷ் குமார் என்ற வாலிபர் குற்றத்தை ஒப்புக் கொண்ட நிலையில், கோவையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன் றத்தில் இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடந்துவந்தது.

நேற்று இவ்விசாரணை நிறைவடைந்த நிலையில் நீதிபதி ராதிகா தீர்ப்பளித்தார்.

போக்சோ வழக்கில் சந்தோஷ் குமாருக்கு ஆயுள் தண்டனையும் 302 சட்டப்பிரிவின் கீழ் மரண தண் டனையும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும் தடையங்களை மறைத்த குற்றத்திற்கு அவருக்கு 7 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் சிறுமியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாய் வழங்க அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

கோவையில் போக்சோ நீதிமன்றம் அமைக்கப்பட்ட பின் வழங்கப்பட்ட முதல் தீர்ப்பாகும் இது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!