வாடா மலராய் வயது முழுக்க வந்த காதல்; வாலிபம் போன பின்னர் வசந்தம் வந்தது

திருச்சூர்: 65 வயது மூதாட்டி தனது 20 ஆண்டு கால நண்பரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இத்திருமண நிகழ்வில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

புதுமணத்தம்பதிகளின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

கேரளாவைச் சேர்ந்த லட்சுமி அம்மாள் கடந்த 21 ஆண்டுகளுக்கு முன்பு கணவரை இழந்துவிட்டார்.

முன்னதாக, மரணப்படுக்கையில் இருந்த கணவர், தமது மனைவி லட்சுமி அம்மாளை கடைசி வரைக் கவனித்துக்கொள்ளும்படி கோச்சானியன் என்பவரிடம் கூறினார்.

அதன்படி கடந்த 21 ஆண்டுகளாக லட்சுமி அம்மாளுக்கு பாதுகாப்பாக இருந்து வந்துள்ளார் கோச்சானியன். இத்தனை ஆண்டு காலமாக நீடித்த நட்பின் மூலம் ஒருவரையொருவர் நன்கு புரிந்துகொண்ட இருவரும் திருமணம் செய்துகொள்வது என முடிவெடுத்தனர். இதையடுத்து திருச்சூரில் உள்ள அரசு முதியோர் இல்லம் இவர்களது திருமணத்துக்கு ஏற்பாடு செய்தது. முதியோர் இல்ல கண்காணிப்பாளர் தலைமையில் நடைபெற்ற திருமண நிகழ்வில் பலர் கலந்துகொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட புகைப் படத்தை சமூக வலைத்தளங்களில் பலர் பகிர்ந்து வருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!