ராட்சத ராட்டினத்தில் சிக்கியது சிறுமியின் தலை; தப்பியோடிய ஆபரேட்டர்

சென்னை பெசன்ட்நகர் கடற்கரையில் செயல்பட்டு வரும் தனியார் விளையாட்டுப் பூங்காவில் உள்ள ராட்சத ராட்டினத்தில் ஒரு சிறுமியின் தலை சிக்கிக் கொண்டது.

அந்தச் சிறுமியின் தலையை விடுவிக்கும் பணியில் ஈடுபடாமல் அங்கிருந்து ஓடிய ராட்டின ஆபரேட்டரை போலிசார் தேடி வருகின்றனர்.

அந்தக் குறிப்பிட்ட பூங்காவில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அங்கு சென்ற கேரள சிறுமி சல்மா, ராட்சத ராட்டினத்தில் ஏறியுள்ளார்.

ராட்டினம் சுற்றத் தொடங்கியபோது எதிர்பாராத விதமாக அவரது தலை பக்கவாட்டு கம்பிகளுக்கு இடையே சிக்கிக்கொண்டது.

அதனைப் பார்த்து அருகில் இருந்தவர்கள் கூச்சலிட்டதால் பதற்றமடைந்த ராட்டினத்தின் ஆபரேட்டர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

தகவலறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் நீண்ட நேரம் போராடி சிறுமியைப் பத்திரமாக மீட்டனர்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள சாஸ்திரி நகர் போலிசார் விபத்து குறித்து விசாரித்து வருகின்றனர்.

விளையாட்டு பூங்காவில் பாதுகாப்பு ஏற்பாடுகள் முறையாக செய்யப்படவில்லை என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் குறிப்பிட்டனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!