போண்டா சாப்பிட்டபோது தொண்டையில் சிக்கி பெண் உயிரிழப்பு

போண்டா சாப்பிடும்போது தொண்டையில் போண்டா சிக்கி சென்னையில் பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை சூளைமேடு காமராஜர் நகர் 3வது தெருவைச் சேர்ந்தவர் கங்காதரன். ராயப்பேட்டையில் உள்ள இரு சக்கர வாகன உதிரி பாகங்களை விற்பனை செய்யும் கடையில் வேலை செய்து வருகிறார்.

இவரது மனைவி பத்மாவதி. தன் கணவருடன் தாய் வீட்டில் வசித்து வருகிறார் 45 வயது பத்மாவதி. இவர்களுக்கு திருமணமாகி 11 ஆண்டுகள் ஆகிறது.

நேற்று (ஜனவரி 2) பத்மாவதியும் அவரது தாயாரும் சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒரு கடையிலிருந்து போண்டா வாங்கி, வீட்டில் வந்து சாப்பிட்டனர்.

பத்மாவதி சாப்பிடும்போது தொண்டையில் போண்டா அடைத்ததால் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது.

இதையடுத்து அவசர சிகிச்சை வாகனம் மூலம் அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் பத்மாவதி ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

அவரது உடல் உடற்கூறு சோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தின் தொடர்பில் போலிசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!