தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 60.
இந்த விவசாயி, தன் வயலில் உரம் ஏதும் போடாமல் வளர்த்த மாப்பிள்ளை சம்பா நெற்பயிர் 123 நாட்களில் ஆளையே மறைக்கும் அளவுக்கு 6 அடி உயரம்வரை வளர்ந்துள்ளது.
ஒவ்வொரு கதிரிலும் 400க்கும் மேற்பட்ட நெல்மணிகள் விளைந்துள்ளன.
அதை விவசாயிகளும் பொது மக்களும் பார்த்து வியந்து படம் எடுத்துச் செல்கிறார்கள்.
இன்னும் ஏறக்குறைய ஒரு மாதத்தில் அறுவடை செய்யலாம் என்று சீனிவாசன் தெரிவித்தார்.
#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity