நெல்லை கண்ணன் சேலம் சிறைக்கு மாற்றம்; தலைவர்கள் பலரும் கடும் கண்டனம்

சேலம்: நெல்லை கண்ணன் நேற்று காலை மதுரை சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு பலத்த போலிஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டார்.

சிறந்த ஆன்மிக, இலக்கிய சொற்பொழிவாளரான நெல்லை கண்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவும் நெல்லை கண்ணன் மீதான பொய் வழக்குகளைத் திரும்பப்பெறுவதுடன் அவரை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் வலியுறுத்தி உள்ளனர்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் கூறுகையில், “நெல்லை கண்ணன் கைது நட வடிக்கை தமிழகத்தில் நடைபெறுவது அதிமுக அரசா? பாஜக அரசா?” என்ற கேள்வியை எழுப்புவதாக கண்டனம் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நெல்லை கண்ணன், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாகப் பேசியுள்ளதாக சர்ச்சை எழுந்ததைத் தொடர்ந்து, நெல்லை கண்ணனைப் பெரம்பலூர் தனியார் விடுதியில் போலிசார் கைது செய்தனர். பின்னர் அவரை நெல்லை நீதிமன்றத்தில் முன்னி லைப்படுத்தினர். வரும் 13ஆம் தேதி வரை அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!