தோற்கடித்த வாக்காளர்களுக்கு நன்றி கூறிய வேட்பாளர்

மதுரை: உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்ட உசிலம்பட்டியைச் சேர்ந்த ஒருவர் தன்னை தேர்தலில் தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டிக்குட்பட்டது சேடபட்டி ஊராட்சி ஒன்றியம். இங்குள்ள கேத்துவார்பட்டி ஊராட்சியில் 2வது ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு முருகேசன், பவுன்தாய், தங்கப்பாண்டி என மூன்று பேர் போட்டியிட்டனர்.

இதில், 39 வாக்குகள் பெற்று தங்கப்பாண்டி வெற்றி பெற்றார். முருகேசன் 7 வாக்குகளும் பவுன்தாய் 22 வாக்குகளும் பெற்றனர்.

இந்நிலையில், கட்டில் சின்னத்தில் போட்டியிட்டு 7 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியடைந்த முருகேசன் என்பவர் தன்னைத் தோற்கடித்த மக்களுக்கு நன்றி தெரிவித்து சுவரொட்டி ஒட்டியுள்ளார்.

அதில், "என்னை தோற்கடித்த பொதுமக்களுக்கு நன்றி. நீங்க இப்படி செய்வீங்கனு நான் கனவுல கூட எதிர்பார்க்கல..." என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த சுவரொட்டி இணையத்தில் வேகமாகப் பரவி வருகிறது.

தேர்தலில் வெற்றி பெற்றிருந்தால்கூட முருகேசன் இவ்வளவு பிரபலமாகியிருப்பாரா என்று தெரியவில்லை. ஆனால் இந்த சுவரொட்டி மூலம் நன்கு பிரபலமாகிவிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!