மின்மாற்றியில் தீ; தெருவில் சென்ற இளம்பெண் கருகி பலி

சென்னை சூளைமேடு புதிய மேற்கு தெருவைச் சேர்ந்தவர் 35 வயதான லீமா ரோஸ். அவரது கணவர் ஜேம்ஸ்.

வீட்டுக்கு அருகில் உள்ள கடையில் மளிகைப்பொருள்கள் வாங்குவதற்காக திருமதி லீமா நேற்று வெளியில் சென்றார்.

ஆண்டவர் தெரு ஜங்ஷன் அருகே சென்று கொண்டிருந்தபோது, அங்கிருந்த மின்மாற்றி (டிரான்ஸ்பார்மர்) பெட்டியில் கம்பிவடங்கள் திடீரென வெடித்துச் சிதறின.

அந்த கம்பிவடங்கள் தீப்பற்றி எரிந்ததில், தீப்பொறிகள் வெளியே சிதறி அந்த தெரு முழுவதும் தீப்பொறிகள் பரவின.

அந்த சமயத்தில் அந்தப் பக்கமாக வந்த லீமா ரோஸ் மீது சில தீப்பொறிகள் விழுந்தன. அதனால் லீமாவின் நைலான் நைட்டி உடையில் தீப்பற்றியது. மடமடவென பற்றிய தீ வேகமாகப் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது.

இதனால், எரிச்சல் தாங்க முடியாமல் கதறிய லீமாவைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர், விரைந்து வந்து தண்ணீரை அவர் மீது ஊற்றினர்.

மேலும் தெருவில் கிடந்த மண்ணை வாரி இறைத்து தீயை அணைக்க முயன்றனர். அதற்குள் லீமாவின் உடலில் சுமார் 80% கருகிவிட்டது.

உடனடியாக அவரை, கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். ஆனால், சற்று நேரத்திலேயே லீமாவின் உயிர் பிரிந்தது.

இது குறித்து சூளைமேடு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

#தமிழ்முரசு #சமூகத்தின்குரல் #tamilmurasu #voiceofthecommunity

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!