சென்னை: அரியலூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய தொழில்நுட்ப மதிப்பீட்டுக்குழு முதல் கட்ட அனுமதியை வழங்கி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கடந்த வாரம் டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தில் இதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. மத்திய சுகாதாரத் துறை அமைச்சகத்தின் நிர்வாகக் குழுவின் பரிசீலனைக்குப் பிறகு இறுதி அனுமதி அளிக்கப்படும் பட்சத்தில் புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்குவதற்கான அதிகார பூர்வ அறிவிப்பு இந்த வாரத்தில் வெளியாகும் என மருத்துவக் கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது மாநில அரசின் கட்டுப்பாட் டின் கீழ் 24 மருத்துவக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் மொத்தம் 3,350 எம்பிபிஎஸ் இடங்கள் இருக்கின்றன. இந்நிலையில் திருப்பூர், ராமநாதபுரம், நீலகிரி, நாமக்கல், திண்டுக்கல், விருதுநகர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், திருவள்ளூர் ஆகிய 9 இடங்களில் புதிய மருத்துவக்கல்லூரிகள் அமைப்பதற்கு மத்திய அரசு சமீபத்தில் ஒப்புதல் அளித்தது.